Tuesday, June 06, 2006

வித்யா

யாரோ புதிய முகம் என்று அந்த வலைப்பதிவை அலட்சியமாய் கிளிக்கி பார்த்து, படித்து அதிர்ந்தேன் என்று சொல்லலாமா, வியந்தேன் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. காலம் மாறுகிறது, சமூகத்தின் பார்வையும் ஆரோக்கியமாய் மாறத்தொடங்கியுள்ளது.
இந்த மாற்றங்கள் மேல் மேலும் பெறுக வேண்டும் என்பதே என் விருப்பம். இவர் தொடர்ந்து தன் வலைப்பதிய ஆரர்ம்பித்தால், தமிழ் இணைய வரலாற்றில் ஒரு கவனிக்க தக்கவராய் மாறுவார் என்பது உறுதி.

தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் சொல்லி பதிவு ஆரம்பித்துள்ளார் வித்யா.
பாருங்கள்.

http://livingsmile.blogspot.com/

வித்யாவின் வலைப்பதிவுக்கு சென்று அவருக்கு வரவேற்பு அளியுங்கள் என்று தமிழ் வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

10 பின்னூட்டங்கள்:

At Tuesday, 06 June, 2006, சொல்வது...

நல்லதொரு செயல் உஷா. என் வரவேற்பைத் தெரிவித்துவிட்டேன்.

 
At Tuesday, 06 June, 2006, சொல்வது...

நன்றி உஷா..நான் குறிப்பிடலாம் என்று நினைத்த பதிவினை நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்.

வித்யாவிற்கு உற்சாகமும் ஆர்வமும் கொடுப்போம்.

 
At Tuesday, 06 June, 2006, சொல்வது...

அவருடைய நிலையை எண்ணி நீங்க வரவேற்பு கொடுக்க சொன்னீங்களோ என்னவோ தெரியவில்லை..

ஆனால் அவருடைய எழுத்துக்காகவே அவருக்கு நாளடைவில் வரவேற்பு இருக்கும்..

நல்லாவே எழுதறாங்க..

 
At Tuesday, 06 June, 2006, சொல்வது...

நன்றி சகோதரி,

நானும் வரவேற்பு கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து ஊக்கம் கொடுக்க வேண்டியது உங்க வேலை, என்ன செய்வீங்க தானே?

- பரஞ்சோதி

 
At Tuesday, 06 June, 2006, சொல்வது...

இந்தப் பதிவை மற்றோருக்கு சுட்டிக்காட்டியது அருமையான செயல்...ஒரு நல்ல பதிவு இது..

 
At Tuesday, 06 June, 2006, சொல்வது...

தங்களது நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.வித்யாவிற்கும் ஊக்க உரம் இட்டுவிட்டோம்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

 
At Tuesday, 06 June, 2006, சொல்வது...

எனக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு, தனியாகவே ஒரு post பண்ணியிருக்கிங்க... இந்த நண்பர்கள் இருக்கையில் வேறென்ன வேண்டும்...

பராட்டுக்கு., நன்றி ஜோஸப் அவர்களே...

 
At Tuesday, 06 June, 2006, சொல்வது...

நன்றி. இந்த பதிவின் மூலமாகத்தான் எனக்கு தெரிய வந்தது.

 
At Tuesday, 06 June, 2006, சொல்வது...

வித்யா அவர்கள் முத்தமிழ் குழுமத்திலும் உறுப்பினராக சேர்க்கப்பட்டு தனது முதல் மடலை எழுதியுள்ளார்.

http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

 
At Tuesday, 06 June, 2006, சொல்வது...

முத்துகுமரன்,நிலவு நண்பன், பரஞ்சோதி, துபாய்ராசா,மஞ்சூர் ராசா, ரோசா வசந்த், ஜோசப் சார், யோகன், மனதின் ஓசை அனைவரும் வித்யாவின் பதிவுக்கு சென்றதைப் பார்த்து மகிழ்ந்தேன்.

ஜோசப் சார், ஒவ்வொரு நாளும் பதிவுகள் புதியது புதியதாய் அறிமுகமாகின்றன. அதையெல்லாம் எத்தனை பேர்கள் படிக்கிறார்கள்?
ஆனால் இவரை கொஞ்சம் ஸ்பெஷலாய் குறிப்பிட்ட காரணம், ஒரு அங்கிகாரம் தரும் முயற்சியே! நம்மைப் போல, இணையத்தில்
சில வருடங்களாய் குப்பைக் கொட்டுபவர்கள், சுட்டிக்காட்டினால் மேலும் சிலர் படிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததற்கு மேலே வரவேற்பு கொடுத்து உடன்பிறப்புகள் அசத்தியில்லே விட்டார்கள்?

வித்யா, உங்களைப் போன்றோரின் பிரச்சனைகளை சில பதிவுகளில் எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். வேண்டும் என்றால் லிங்க் அனுப்புகிறேன்.

 

Post a Comment

<< இல்லம்