Monday, February 26, 2007

கவிதா, அனிதா & நான்

கவிதா என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்களை ஒரு நினைவூட்டலுக்கு என் பதிவில் இருந்தால் நல்லது என்று இங்கு எடுத்துப் போட்டுள்ளேன்.
------------------------------------------------------------------------------------

உஷாஜி’க்கு புதிதாக அறிமுகம் தேவை இல்லை எனலாம்..இணையத்தில் பல வருடங்களாக இருப்பவர், என்னை போன்ற புதியவர்களை ஊக்கம் கொடுத்து பாராட்டி எழுதவைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் பத்திரிக்கை துறைக்கும் புதிதல்ல, நான் இவரை முதல் முதலில் தெரிந்து கொண்டது அவள் விகடன் வாசகியாக. இவரின் கட்டுரை ஒன்றை படித்துவிட்டு, இவர் பெயரை ப்ளாகரில் பார்த்து இருக்கிறோமே..என்று அதற்கு பிறகு இவரின் ‘நுனிப்புல்’ சென்று படித்து வருகிறேன்..இன்று நம்மிடையே..உஷாஜி..

வாயை புடுங்கற ரவுண்டு:-கவிதா:- உஷாஜி, சொந்தநாடு திரும்புவதை எப்படி உணருகிறீர்கள்?மகள் கல்லூரி படிப்புக்கு இந்தியா சென்றவுடன், வெளிநாட்டு வாழ்க்கை போதும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் வலுத்துக் கொண்டு வந்தது. மகன் பத்தாவது தேர்வு முடிந்ததும் நானும் அவனும் ஊருக்கு திரும்புவது என்பது முன்பே எடுத்த முடிவு. இதில் இன்ப அதிர்ச்சியாய் என் கணவருக்கு வேலை தேடி வந்துள்ளது. ஓரளவு நாடோடி வாழ்க்கை பழகிவிட்டதால், மாற்றத்தை விரும்பி ஏற்கிறோம். அதே சமயம், கொஞ்சம் சுக வாழ்க்கை வாழ்ந்து பழகிவிட்டதால், லேசான கலவரமும் அவ்வப்பொழுது வருகிறது.

கவிதா:- எல்லா பத்திரிக்கைகளிலும் அநேகமாக எழுதி இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் எழுத்தில் உங்களுக்காக தனிப்பட்ட ஒரு நடையை வைத்து இருக்கிறீர்களா?.
ஓரளவு அனைத்து இணைய இதழ்களில் எழுதியிருக்கிறேனே தவிர, அச்சு இதழ்களில் அதிகம் இல்லை.முதலில் நான் நல்ல வாசகி, பிறகே எழுத்தாளினி. வேகமான, தொய்வில்லாத நடையும், மெல்லிய நகைச்சுவையும், யதார்த்தமான எளிமையான எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும். அதை என் எழுத்திலும் கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறேன்.

கவிதா:- அரபு நாடுகளில் பெண்களின் கட்டுபாடு பற்றி, எதற்கு அப்படி என்று அறிந்து கொண்டது உண்டா?
உள்ளூர் அரபி பெண்களுடன் பழகும் வாய்ப்பு வந்ததில்லை. ஆனால் பிற நாட்டு அரபி பெண்கள் (இஸ்லாமிய) சிலருடன் நட்பு உண்டு. பெண்களுக்கு தரப்படும் கல்வி சுயசிந்தனையை வளர்க்கும் என்பதை அவர்களுடன் பேசும்போது நன்கு தெரியும்.. விரைவில் விவரமாய் எழுத உத்தேசித்துள்ளேன்.

கவிதா:- உங்கள் எழுத்தில் நீங்கள் கொண்டுவர நினைக்கும் சில விஷயங்கள்?
மனிதர்கள் அனைவருமே சுவாரசியமானவர்கள், விதவிதமான கேரக்டர்கள். அதை கதைகளில் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

அணில்:- உஷா அக்கா, அது என்னா சின்ன புள்ள மாதிரி ஸ்டாம்பு கலக்ஷ்னஸ் எல்லாம் செய்யறீங்க..? (கவி வேஸ்ட்..இதுமாதிரி எல்லாம் செய்யறது இல்ல..வாய் கிழிய பேச சொல்லுங்க நல்லாஆஆஆ பேசுவாங்க..)
அட அனி என் செல்லம் நீயாவது கேட்டியே!. சுதந்திரத்துக்கு முந்திய திருவாங்கூர், மைசூர் சமஸ்தான ஸ்டாம்புகள் எல்லாம் வெச்சிருக்கேன். மிக பழைய, அபூர்வமானது பல இருக்கின்றன. அப்படியே நாணயங்களும். இதைப் பற்றியும் எழுதணும். புகைப்படத்துடன்.

கவிதா:- இணையத்தில் “பெண்கள் புலம்புகிறார்கள்” உங்கள் கருத்து.
இணையத்தில் மட்டுமா ? இந்த பழக்கம் பல பெண்களுக்கு இருக்கு. நான் சொல்ல விரும்புவது ஒன்றேதான். புலம்பிக் கொண்டு இருந்தால் கேலியும் நக்கலும் அதிகம்தான் ஆகும். உன்னுடைய உரிமை, அது யாரையும் பாதிக்காது என்றால் அதை செயல் படுத்த யாரிடமும் கேட்டுக் கொண்டு இருக்காதே என்பதுதான்.

கவிதா:- என்னுடைய நண்பர் ஒருவர் “Don’t write like a typical house wife” என்று சொல்லுவார். பொதுவாக பெண்கள் அப்படி எழுதுவதாக அவரின் கருத்து.
House wife என்றால் ஒரு இளக்காரம்/நக்கல் இருக்கிறது. இது பெண்களூக்கான பத்திரிக்கை தேவையா என்ற தலைப்பில் இதுல எழுதியிருப்பதும், உங்க கேள்வியை ஒட்டித்தான். இது ஆண்கள் மட்டுமே மேதாவிகள் என்று நினைத்துக்கொள்ளுபவர்களில் வழக்கமான நக்கல் இது. பெண்கள் எழுதத்தொடங்கியப்பொழுது, (ஹவுஸ் ஓய்ப்புகள்) அவர்களுக்கு தெரிந்ததை எழுதினார்கள். வீட்டினுள் இருக்கும் பிரச்சனைகள் அப்படிதானே வெளி உலகிற்கு தெரிய வந்தன! எழுத்து என்பது அவரவர் ரசனையும், புரிதலும் பொறுத்து அமைகிறது. இதில் நக்கல் செய்ய என்ன இருக்கு? அது சரி, நான் எழுதுவது எப்படி இருக்கு ?

கவிதா:- திருமணம் நிச்சயம் செய்யும் போதே தனிக்குடித்தினம் பேசும் பெண்கள் பற்றியும் சொல்லுங்கள்.நீங்க வேற, பையன்களே தனிக்குடித்தனம் போக திட்டம் போடுதுங்க. கேட்டால், நானும் வேலைக்குப் போகிறேன், அவளும் போறா. உங்களுக்கு எங்களோட இருந்தா சரிப்பட்டு வராது என்கிறார்கள்.

அணில்:- அக்கா “கிழவி” கதையின் மூலம் சொல்லவந்த கருத்தை கவிதா மாதிரி ஆளுங்களுக்கு சொல்லுங்கஅனி, வயது அதிகம் ஆக, ஆக குழந்தைப் போல மாறிவிடுகிறார்கள். ஆனால் உண்மையான குழந்தையின் நடத்தைகளை ரசித்து ஏற்றுக் கொள்ளும் நாம், பெரியவர்களிடம் எரிச்சலையே காட்டுகிறோம். வயதானப்பிறகு பல கிழ, கிழவிகளிடம் காண்பது அதீத சுயநலம்.

கவிதா:- “ஆணுக்கும் உண்டு sexual harassment” - உங்கள் பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. ஆண்களுக்கு உண்டு என்றாலும், அவர்கள் எளிதாக வெளிவரமுடியும், நேரடி பிரச்சனை இல்லை, மனவலி குறைவு, உடல் ரீதியான பாதிப்பு குறைவு என்று நினைக்கிறேன் -இது பற்றி உங்கள் கருத்து.
பெண்களுக்கு ஏற்படும் தாக்குதலைவிட ஆண்களுக்கு குறைவுதான். ஆனால் இருக்கு. சிறுவயதில் ஏற்படும் தாக்குதல் பாதிப்பு பின்னால் அவன் மண வாழ்க்கையே பாதிக்கப்படலாம் இல்லையா? பெண், தன் சோகத்தை முன்னபின்ன பழக்கம் இல்லாத ரயிலில் கூட பயணிக்கும் பெண்ணிடம் கூட பகிர்ந்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்கள் அப்படி செய்வதில்லை.மூன்று வாரத்திற்கு முன்பு, இங்குள்ள கல்ப் நியூஸ் செய்தித்தாளில் ஒரு விசித்திர செய்தி. ஐரோப்பிய நாடு ஒன்றில், பதினைந்து வயது சிறுவன், தன் வகுப்பு மாணவனுடன் படிக்க அவன் வீட்டுக்குப் போயிருக்கிறான். இரவு வரவேற்பரை சோபாவில், படுத்திருந்தவனிடம், தோழனின் தாயே...... என்ன சொல்ல? அவன் படிப்பில், நடத்தையில் பல மாற்றங்களை பெற்றோர் கண்டுப்பிடித்து, கவுன்சிலிங் போய் கொண்டு இருக்கிறார்களாம். போலீஸ் கேஸ் ஆகி, வழக்கு நீதிமன்றம் வந்துள்ளது.நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், பெண்ணின் வேதனைகள் ஆணுக்கு என்றும் புரியாது. அதுப் போலத்தான் ஆண் பிரச்சனைகளையும் பெண்கள் புரிந்துக் கொள்ள முயல வேண்டும். நம்மைப் போல அவர்கள் வெளியே புலம்புவது இல்லை. ஆனால் புகைப்பது, குடி போன்ற பழக்கங்கள் தன் பிரச்சனையை மறக்கவே என்றுத் தோன்றுகிறது.பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம், ஆண் பெண் வித்தியாசம் காட்டாமல் வளர்த்தால், பையன்களும் தங்கள் பிரச்சனைகளை, கவலைகளை நம்மிடம் பகிர்ந்துக் கொள்வார்கள். அவர்களுக்கு புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். பெண்கள் வெளிப்படையாய் புலம்பியோ, அழுதோ தீர்த்துக் கொள்வதால் ஹார்ட் அட்டாக் அதிகம் வருவதில்லை போல.

கவிதா:- பொதுவாக பெண்களுக்கு பொதுஅறிவு குறைவு, அதை அதிகமாக்கி கொள்ளவும் அவர்கள் சிரத்தை எடுப்பதில்லை. -காரணம்
மேலே கேட்ட ஹவுஸ் ஓய்ப் எழுத்து கேள்வியின் தொடர்ச்சியாய் இதைக் கருதலாம். எங்கள் வீட்டில் அத்தைகளும், பாட்டியும், அம்மாவும் உலக விஷயங்கள் அனைத்தையும் அலசுவார்கள். சிறுமியாய் வாயைப் பார்த்துக் கொண்டு இருந்தது நன்கு நினைவில் இருக்கு.. பிறகு எனக்கு வாய்த்த சிநேகிதகள், தெரிந்த பெண்கள், உறவுகளில் பலரும் நகை, புடைவை, சீரியல் என்று மட்டும் இல்லாமல் பொது விஷயங்கள் பேசுவார்கள். ஏன் ஆண்களில் விஜய் படம், ரஜினியின் புது நாயகி, லோக்கல் அரசியல் என்று உப்பு பெறாத விஷயங்களை மணிக்கணக்கில் பேசுபவர்கள் இல்லையா? ஆனால் இன்று பதிவுலகில் எழுதும் பெண்களில் 99% சதவீத பேர்கள் எல்லா விஷயங்களை எழுதுவதைப் பார்க்க, பார்க்க மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-1. பெண் பதிவர்கள் ஆண் பெயர்களில் எழுத ஆரம்பித்து விட்டால் நிறைய பிரச்சனைகள் இருக்காது - உங்கள் கருத்து
அதுக்கெல்லாம் எந்த பெண்ணும் பயந்தா மாதிரி தெரியவில்லையே

J)2. உங்களின் நுனிப்புல்’ லில் உங்களுக்கு மிகவும் பிடித்த சில
பல முறை நான் கவனித்தது, நான் எழுதியதை விட, எனக்கு வரும் பின்னுட்டங்கள் மிக சுவாரசியமாய் இருக்கும்.

3. உங்களின் கதைகளில் நீங்கள் ரசித்தவைஅதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்

உங்களுக்காக சில, படித்துவிட்டுச் சொல்லுங்கள். http://nunippul.blogspot.com/2006/06/blog-post_27.html - குஸ்கா - என் மனதில் முதலில் தோன்றியது http://nunippul.blogspot.com/2006/06/25-50-75-00-25.html- ..25, ..50,..75,..00,..25- தேன்கூடு போட்டியில் 2வது பரிசு வென்றக்கதை
http://nunippul.blogspot.com/2006/07/blog-post_06.html - ஆன்மா சாந்தியடையுமா?
http://nunippul.blogspot.com/2005/11/blog-post_18.html - கரோமாவில் துளசிக் கல்யாணம் அப்புசாமி.காமில் வந்தது http://nunippul.blogspot.com/2005/12/blog-post_07.html - நடேசன் சார்
http://nunippul.blogspot.com/2005/12/blog-post_11.html - குஞ்சாமணி - கணையாழியில் வெளியானது
http://nunippul.blogspot.com/2005/12/blog-post_17.html - பிள்ளை நிலா
http://nunippul.blogspot.com/2006/01/2006.html - வெற்றி- கணையாழியில் வெளியானது

4. உங்களின் குழந்தைக்கு உங்களிடம் பிடித்த விஷயம் என்ன?இருவருககும் அம்மா எதையும் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தோழி. அதனால் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள், பிறர் முன்னிலையில் கஷ்டப்பட்டு “அம்மா!”

5. “தனிநபர் தாக்குதல்” - உங்கள் கருத்து
ஒன்று ஆபாச தாக்குதல். இது எனக்கு மட்டுமல்லாமல், ஓரளவு எல்லா பதிவாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இருந்த அதிர்ச்சி இப்பொழுது இல்லை. அத்தகைய கமெண்டுக்களை பார்க்காமலேயே குப்பையில் போக செய்தாகிவிட்டது. அடுத்து பதிவுகளில் என்னைப் பற்றி எழுதுவது.. என்ன விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சில சமயம் என்ன ஏது என்று நேராக கேட்டுவிடுவேன். ஆனால் அலட்சியப்படுத்துதலே சரியான வழி.என் எழுத்துக்களை விமர்சிக்கும் உரிமை அனைத்து வாசகர்களுக்கும் உண்டு. எதிர்வினைகளுக்கு நான் பயந்தால் டயரியில் எழுதி வைத்துக் கொண்டு நானே படித்துக் கொள்ள வேண்டும். பொதுவில் போட்டுவிட்டு, கமெண்ட் பாக்சையும் வைத்துவிட்டு, இதற்கு பயந்தால் முடியும? மட்டுறுத்தலும், அனானிமஸ் கமெண்ட்டையும் எடுத்தது ஆபாசம் மட்டுமல்லாது வேண்டாத பிரச்சனைகளையும் சிலர் உருவாக்கினர். பல முறை (கொஞ்சம் யோசனையுடன்) தவறாய் நினைக்க மாட்டார்கள் என்பவர்களுக்கு மட்டும் என் கருத்தை கமெண்ட்டாய் போட்டிருக்கிறேன். சொல்ல வரும் கருத்து தவறில்லை என்றால் அனானிமஸ் கமெண்ட்டோ அல்லது வேறு வேறு புது புது பெயர்களில் (எழுது பெயர் அல்ல) பதிவுப் போடுவது போன்றவை எல்லாம் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத செயல். அனைத்து பிரச்சனைகளும் இதனால்தான்.

6. உங்களை ஏதாவது தமிழ்மண குழுவில் இணைய சொல்லி கூப்பிட்டால் எதில் சேருவீர்கள்.
ஆஹா, அது எப்படி இந்த கேள்வி எனக்கு மட்டும் எக்ஸ்குளூசீவா வருது? ஆரம்பத்தில் இருந்தே, கணிணி பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாததால், இணையம் எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது. இந்த புரிப்படாத மாயாஉலகத்தில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பதே நல்லது என்று மூன்று வருடத்திற்கு முன்பே எடுத்த முடிவு இன்றுவரையில் கடைப்பிடிக்கிறேன்.

7. உங்கள் கதையின் முதல் விமர்சகர் யார்?
நானேதான்.

8. அடிக்கடி நடக்கும் தமிழ்மணத்தில் நடக்கும் பிரச்சனையும், உடனே போடப்படும் பதிவுகள் பற்றியும்
நான் தவிர்த்துவிடுவேன். அப்படிப் போட்டாலும் வித்தியாசமாய், கொஞ்சம் நையாண்டி இருக்கும். உதாரணமாய் தர்ம அடிப் போடுவது எப்படி என்ற பதிவு.

9. இணையம் உங்கள் பார்வையில்
எழுத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பக்கட்டத்தில் இணைய நட்புகளின் வெளிப்படையான கருத்துக்கள் என்னை சீர்திருக்கக்கொள்ள மிக உபயோகமாய் இருந்தது.. தனிப்பட்ட முறையில் மிகவும் தேர்தெடுத்த இணைய நட்புகள், கொஞ்சம் என் வயதை ஒத்த சிநேகிகளுடன் சொந்தக்கதை பேச மெயில் பரிவர்த்தனை மட்டுமே!. அதுவும் மிக, மிக அபூர்வமாய். சாட்டிங் செய்வதில்லை என்பதும் இன்றுவரைக் கடைப்பிடிக்கும் விரதம். கணிணி சம்மந்தமாய் பிரச்சனை என்றாலும் கேட்டவுடன் கைக் கொடுக்கும் நட்புகளும் உண்டு. ஆபாச பின்னுட்ட பிரச்சனையால் அவதிப்பட்டப் பொழுது, தானே முன் வந்து எப்படி எதிர்க்கொள்வது என்று சொல்லிக் கொடுத்த நல்லுள்ளங்கள் நிறைந்த இடம் இது. ஆக மொத்தம் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”

10. உங்கள் குடும்பத்தினர் உங்களின் எழுத்துக்கு துணையாக இருக்கிறார்களா?. அவர்களால் தடை ஏதும் உள்ளதா?
என் கணவர் செய்யும் மிகப் பெரிய உபகாரம் நான் எழுதியது எதையும் படிக்க மாட்டார். ஆனால் ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லிவிடுவேன். எழுதுவதும், எழுதாமல் இருப்பதும் உன்னுடைய விருப்பம், யாராவது ஏதாவது சொன்னார்கள் என்பதற்காக எழுதுவதை நிறுத்தாதே என்பார். என் மாமனாரும், என் அப்பாவின் தங்கை- என் அத்தை மட்டுமே விசாரிப்பார்கள், தேடிப்பிடித்துப் படிப்பார்கள்.சில சொந்தங்கள், நட்புகளிடம் அறிவுரைகள் வந்தன. யாரையும் இப்படி எழுது, ஏன் இந்த மேட்டர் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பது அபத்தம். என்ன எழுத வேண்டும் என்பது எழுதுபவர்களின் விருப்பம். அவரவர் ரசனைக்கு ஏற்றாற்போல தேடி படித்துக் கொள்ள வேண்டியதுதான்..

செலக்டீவ் அம்னீஷியா உஷா சொன்ன தத்துவம்- Happiness is nothing more than good heath and a bad memory
எழுதியவர் கவிதா at 8:34 PM

22 - பார்வைகளின் பதில்கள்:
கவிதா said...
உஷாஜி, Excellent Replys. பின் குறிப்பில் நீங்கள் சேர்க்க சொன்ன அணிலை பற்றிய விஷயத்தை அமுக்கி விட்டேன். முன்னமே ஓவரா அது ஆடுது..இதை வேற சொன்ன இன்னும் ஆடும் அதனால அமுக்கிட்டேன்.. ..
9:13 PM
ஜி - Z said...
ம்ம்ம்.. ஓரமா வந்து ஓரமா போற என்ன மாதிரி ஆட்களுக்கு பல பதிவர்களை அறிமுகப் படுத்துவது உங்க கேப்பங்கஞ்சி நேர்(மின்)காணல்தான்.கீப் இட் அப்.. :)))
9:22 PM
ஜி - Z said...
அதுக்காக உஷாவ கூட தெரியாம இருப்பீங்களான்னு கேக்கப் படாது... அவிங்கள நல்லா தெரியும். அவுங்களுக்குத்தான் என்னத் தெரியாது :)))))
9:38 PM
சென்ஷி said...
நுனிப்புல் மாதிரி உஷா மேடம் படைப்பை நீங்க வாசிக்கலன்னு நல்லா தெரியுது. ஆனா இந்த தடவ கலாட்டா கொஞ்சம் கம்மி மாதிரி தெரியுது, ஏன் பயமா?சென்ஷி
9:42 PM
கவிதா said...
//நுனிப்புல் மாதிரி உஷா மேடம் படைப்பை நீங்க வாசிக்கலன்னு நல்லா தெரியுது.//உண்மை..முழுசா எல்லா படைப்புகளும் படிக்கல..//ஆனா இந்த தடவ கலாட்டா கொஞ்சம் கம்மி மாதிரி தெரியுது, ஏன் பயமா?//இந்த கேள்விகள் அவர்களுக்கு அனுப்பி 2 வாரங்கள் ஆகுது..மட்டுமல்லாமல் யாருக்கும் நான் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. என் கணவரின் அன்பில் அவரின் உழைப்பிலும் என்னுடைய உழைப்பிலும் நான் வாழ்கிறேன். இங்கு எனக்கு யாரும் சோறு போட்டு, அவர்கள் நிழலில் நான் இல்லை எவருக்கும் பயந்து நான் வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
9:48 PM
கவிதா said...
//ம்ம்ம்.. ஓரமா வந்து ஓரமா போற என்ன மாதிரி ஆட்களுக்கு பல பதிவர்களை அறிமுகப் படுத்துவது உங்க கேப்பங்கஞ்சி நேர்(மின்)காணல்தான்.கீப் இட் அப்.. :))) //நன்றி ஜீ, //அதுக்காக உஷாவ கூட தெரியாம இருப்பீங்களான்னு கேக்கப் படாது... அவிங்கள நல்லா தெரியும். அவுங்களுக்குத்தான் என்னத் தெரியாது :))))) //நல்ல வேளை சொல்லிட்டீங்க..!! தப்பிச்சிட்டீங்க.. இல்லைன்னா அவங்களும் அவங்க பிரண்டு அணிலும் உங்களை உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பாங்க..
10:01 PM
பொன்ஸ் said...
ரொம்ப நல்லா வந்திருக்கு உஷாவின் பேட்டி.. இதுவரை படிச்சதிலயே ஸ்டார் கஞ்சி இது தான் :))அணிலபத்தி என்ன சொன்னாங்க? இப்படி இருட்டடிப்பு பண்றீங்களே!! :))
10:09 PM
கவிதா said...
//ஆனா இந்த தடவ கலாட்டா கொஞ்சம் கம்மி மாதிரி தெரியுது, ஏன் பயமா?//தெருவில் அசிங்கம் செய்யும் சிலருக்காக நானும் அவர்களுடன் சேர்ந்து தெருவில் அசிங்கம் செய்யமுடியாது. அமைதியாக இருப்பதால் அது "பயம்" என்று நினைத்து கொண்டால் நான் பொருப்பாக முடியாது.
10:10 PM
கவிதா said...
//ரொம்ப நல்லா வந்திருக்கு உஷாவின் பேட்டி.. இதுவரை படிச்சதிலயே ஸ்டார் கஞ்சி இது தான் :))//நன்றி பொன்ஸ், ஸ்டார் கஞ்சி ' வேற பேரு குடுத்துட்டீங்க.. சந்தோஷம் தாங்க முடியல..உஷாஜி படிச்சா இன்னமும் சந்தோஷப்படுவாங்க..!! :))//அணிலபத்தி என்ன சொன்னாங்க? இப்படி இருட்டடிப்பு பண்றீங்களே!! :)) //அணிலுக்கு சப்போர்ட் ஜாஸ்தி அதை போட்டா எங்க என் எழுத்தின் குட்டு உடைப்பட்டு விடுமோன்னு தான் போடல.. அதுவும் உஷாஜி இப்படி சொன்ன பிறகு எல்லாரும் அதையே சொல்ல போறாங்க.. இதோ பொன்ஸ் உங்களுக்காக..-அனிக்கு இருக்கும்பாசப்பிணைப்பு பத்தி ஒரு வரி சேர்க்க முடியுமான்னு பாருங்க. நான் உங்க பதிவுகளை படிப்பதே, அணிலுக்காக தான். ஏன் கொஞ்சநாளா அது அடக்கி வாசிக்குது? கமெண்ட்டு கூடஅதுக்குதான் போடுவேன். உங்களுக்கு இலலை :-)உஷா
10:14 PM
கவிதா said...
//என்னுடைய நண்பர் ஒருவர் “Don’t write like a typical house wife” என்று சொல்லுவார். // //அது சரி, நான் எழுதுவது எப்படி இருக்கு ?//இது என்னுடைய நெருங்கிய நண்பர், ப்ளாக்கு சம்பந்தம் இல்லாதவர், அவருக்கு உங்களுடைய எழுத்து பிடிக்கும். என்னைவிட உங்களின் எழுத்தை அதிகம் படித்து, உங்களை பற்றி எனக்கு சொல்லுவார். உங்களின் மேல் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கும் மனிதர். :))) அதனால் அவரின் கருத்தாகவே.." நீங்க சூப்பரா எழுதறீங்கன்னு" சொல்றேன். :)))))
10:22 PM
ramachandranusha said...
ஜி, இப்ப நேரமில்லை. அதனால் பதிவுகள் படிப்பதும், பின்னுட்டம் இடுவதும் குறைத்துக் கொண்டேன். ஆனால் படித்து, மனதுக்கு பிடித்திருந்தால் உடனே கமெண்ட் போட்டுவிடுவேன். சமீபத்தில் வந்த செல்லி என்பவர் பதிவை சில நண்பர்களுக்கு சிபாரிசு செய்தேன், நானும் கமெண்ட் போட்டேன். சிலருடையது விட்டுப் போய் விடுகிறது. சந்தோஷ் பதிவுக்கூட படித்ததில்லை என்று சொன்னேன். இனி கட்டாயம் படிக்கிறேன். பிடித்தால் கமெண்ட் கட்டாயம் உண்டு :-)பொன்ஸ், நன்றி. ஆனா என்ன கேட்டுக்கிட்டு என்ன பலன்? எனக்கு அனிக்கும் உள்ள பாசப்பிணைப்பு கவிதாவைஇவ்வளவு உறுத்தும் என்று நினைக்கவேயில்லை. அனி, வருத்தப்படாதே கண்ணு!கவிதா, அந்த நண்பரே வந்து சொன்னாத்தான் நம்புவேன் :-)
11:25 PM
ramachandranusha said...
சென்ஷி, நுனிப்புல்லை நீங்க நல்லா மேஞ்சிருக்கீங்கன்னு புரியுது :-) கவிதாவை விடுங்க. உங்களுக்கு என் எழுத்தைப் பற்றி ஏதாவது கேட்கணும்னு தோணிச்சுன்னா தாராளமா கேட்கலாம். கவிதா என்னிடம் கேட்ட கேள்விகளில் இதை தெளிவா சொல்லியிருக்கேனே?
11:28 PM
கவிதா said...
//பொன்ஸ், நன்றி. ஆனா என்ன கேட்டுக்கிட்டு என்ன பலன்? எனக்கு அனிக்கும் உள்ள பாசப்பிணைப்பு கவிதாவைஇவ்வளவு உறுத்தும் என்று நினைக்கவேயில்லை. //இல்லையா பின்ன, நான் கஷ்டப்பட்டு, ஒரு பதிவு போட்டு அதுக்கு 10 பேரு வந்து சண்டை போட்டு அவங்களை சமாளிச்சி ஒரு வழியா அனுப்பி வச்சா.. இந்த அணிலு உட்கார்ந்த இடத்தில் என்னை நக்கல் பண்ணியே எல்லா நல்லா பேரையும் வாங்கிக்குது..நீங்களே சொல்லுங்க நியாமான்னு..?//கவிதா, அந்த நண்பரே வந்து சொன்னாத்தான் நம்புவேன் :-) //இல்ல நிச்சயமா வரமாட்டாங்க, என்னுடைய பதிவுகளை கூட தொடர்ந்து படிக்கின்றார், ஒரு தரம் கூட வந்து பதில் போட்டது இல்லை, பொன்ஸ் பதிவுகள் படித்து க்கூட எனக்கு சொல்லுவார். அவர் படிப்பது அதிகம் பேசுவது குறைவு. அதனால் நான் சொல்லுவதை நீங்க நம்பித்தான் ஆகவேண்டும். வேறு வழியே இல்லை. :))))
11:34 PM
Rajesh said...
//3. உங்களின் கதைகளில் நீங்கள் ரசித்தவைஅதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்//அது சரி, உங்களுக்கு பிடிச்சது எதுன்னு எங்களுக்கு எப்படிக்கா தெரியும்? ஒரே கன்பியூசன் ஆப் தி வேர்ல்ட்.
11:40 PM
கவிதா said...
//அது சரி, உங்களுக்கு பிடிச்சது எதுன்னு எங்களுக்கு எப்படிக்கா தெரியும்? ஒரே கன்பியூசன் ஆப் தி வேர்ல்ட். //வாங்க ராஜேஷ், நான் கேட்கனும்னு நினைச்சேன்..நீங்க கேட்டுட்டீங்க.. நன்றி
11:47 PM
பத்மா அர்விந்த் said...
நல்ல பதில்கள் உஷா. உண்மையில் ஆண்கள் பிரச்சினைகளை தீர்ப்பவர்களாக உருவகம் செய்து யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. சின்ன வயதிலேயே கூட அழும் சிறுவர்களை பெண்மாதிரி அழுவார்களாஎன்றுசொல்லி அழுவதே கூட பெண்மை என்றுசொல்லப்பட்டுவிட்டது. வன்புணரப்பட்ட ஆண்கள்சிலர் அவஸ்தைப்படுவதையும் குற்ற ஊனர்ச்சியில் தவிப்பதையும்பார்த்திருக்கிறேன். நம்சமூதாயம் சில கட்டுப்பாடுகளைவிதித்து வாழ்வதை சுலபமாக்க,இயல்பானதாக இருக்கவிடவில்லை.
4:02 PM
கவிதா said...
//சின்ன வயதிலேயே கூட அழும் சிறுவர்களை பெண்மாதிரி அழுவார்களாஎன்றுசொல்லி அழுவதே கூட பெண்மை என்றுசொல்லப்பட்டுவிட்டது. //வாங்க பத்மாஜி, நான் கூட என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். என் மகன் அழுதால் ஆம்பள பிள்ளை இப்படி அழலாமா.. தைரியமா இருக்கனும்னு சொல்லுவேன்...பெண்களுக்கும் இது பொருந்தும் இருந்தாலும் இப்படி சொல்லியே பழகிவிட்டோம் நாம்.. சரி செய்யனும்..
10:47 PM
சென்ஷி said...
உஷா மேம், உங்க பார்வையில் பெண்ணியம்ங்கறதுக்கு என்ன அர்த்தம் சொல்வீங்க?இது மிக முக்கியமான கேள்வி - தயவுசெய்து பதிலளிக்கவும்..சென்ஷி
11:12 PM
ramachandranusha said...
சென்ஷி வெளிபடையான உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி. இதே கேள்வியை நான் உங்களுக்கும்கேட்கிறேன், பெண்ணியம் என்பதற்கு டெபனீஷியன் நீங்கள்தான் சொல்லுங்கள்.நான் பெண்ணீயம்/ விமனீசம் என்ற வார்த்தையைப் பாவிப்பது இல்லை. நான் வலியுறுத்துவது பரஸ்பரமரியாதையை மட்டுமே! பெண்ணுக்கு என்றும், ஆணுக்கு என்றும் தனிப்பட்ட உணர்வுகளோ, எண்ணங்களோ, கருத்துக்களோ கிடையாது என்பது என் கருத்து. படித்த படிப்புகளும், வாழும் சூழ்நிலைகளும், தரமும் எண்ணங்கள் உருவாகின்றன. நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னுடைய பதில் இந்த பதிவில் உள்ளது. http://nunippul.blogspot.com/2006/03/blog-post.htmlபெண்ணின் மீதான அடக்குமுறைகள் ஆண்டாண்டுக் காலமாய் இருந்தன, இப்பொழுது குறையத் தொடங்கியுள்ளன. என் கருத்து என்னவென்றால் தாங்களே போட்டுக் கொண்டுள்ள கண்ணுக்கு தெரியாத விலங்குகளை உடைத்து விட்டு முன்னேறுவது, பெண்களின் கையில்தான் இருக்கிறது.பத்மா, நாம் பலமுறை விவாதித்த கருத்துக்கள் தானே? விரிவான உங்கள் அனுபவ பகிர்த்தலுக்கு நன்றி.ராஜேஷ் உங்களுக்காக சில கதைகளின் லிங்க், கவிதாவுக்கு அனுப்பி அவங்களும் பதிவில் சேர்த்திருக்காங்க, பாருங்க.
4:46 AM
Madura said...
கவிதா, பத்மா, உஷா, இப்பதான் பார்க்கிறேன், நீங்க எல்லாருமே இந்த "ஆண்களுக்கும்" பிரச்சனைய தெரிஞ்சுருக்கீங்க பேசிருக்கீங்க பக்குவமான்னு. நான் முதல்ல கேட்டப்போ சுத்தமா நம்ப முடியல, ஆனா நம்பத்தகுந்த ஆள் கிட்டருந்த வந்துதனால குளம்பி நம்புனேன். அப்புறம் நிறைய கேள்விப் பட்டேன். அருந்ததி ராய் தான் எனக்கு தெரிஞ்சு முதல் முதலா வெளிப்படையா அப்பட்டமா எழுதியது.(God of Small things - Orange Drink Man)கவியோட பஸ்ல பெண்கள் பிரச்சனை பதிவுல, எல்லா ஆண்களும் ஆதரவு, எதிர்ப்பு, எல்லாருமான்னு போட்டு குழம்புன எடத்தில, நிலவு நண்பன் மட்டும் டக்குன "ஆண்களுக்கும்" குறிப்பிட்ட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.உஷா அக்டோபர் 2005ல எழுதினதை இப்ப பாத்தேன் கவிதா உதவியால.2006ல குடும்பத்தில "ஆண்களுக்கும்" ஒருத்தர் பண்ற அட்டூழியத்தில லைட் அடிக்கிறேன் பேர்வழின்னு மொத்தமா அத்தன பேருக்கும் மெயில் போட்டு நான் வாங்கி கட்டிக்கிட்டேன். ஆள் வச்சு அடிக்கிறேன்னு என்னைய மிரட்டி, அவர் வைஃபு தற்கொலை பண்ணுவேன், அவர் பொண்ணு விவாகரத்துன்னு ஆளாளுக்கு அரட்டி, என் நிலமை கிழிஞ்சுது லம்பாடி ஆகிப் போச்சு. என்னதாருந்தாலும் அவரு வைஃபு பொண்ணு நல்லாருக்கட்டும்னு அடங்கிட்டேன்.அதுக்கப்புறம் அந்த ஆளு குல தெய்வம் கோவில்ல சாமியாடி எல்லாரையும் ஆசிர்வாதம் பண்ண கொடுமை...எங்கயாவது பொலம்பனும்னு தோணுச்சு ... சாரி ...நீங்க மூணு பேரும் இதைப் பத்தி பேசுனது மனசுக்கு ஆறுதலா இருந்தது.நன்றி கவி, உஷா, பத்மா.
8:39 PM
கவிதா said...
//கவிதா, பத்மா, உஷா, இப்பதான் பார்க்கிறேன், நீங்க எல்லாருமே இந்த "ஆண்களுக்கும்" பிரச்சனைய தெரிஞ்சுருக்கீங்க பேசிருக்கீங்க பக்குவமான்னு. நான் முதல்ல கேட்டப்போ சுத்தமா நம்ப முடியல, ஆனா நம்பத்தகுந்த ஆள் கிட்டருந்த வந்துதனால குளம்பி நம்புனேன். //மது ஆண்களுக்கும் நிறைய பிரச்சனை உண்டு உஷாஜி சொன்ன மாதிரி அவங்க வெளியில சொல்லுவது இல்லை. அருள்குமார் ஒரூ பதிவு போட்டு இருக்காரு பாருங்க.. எனக்கு லின்க் தெரியல, அதை படிச்சி பாருங்க அவருக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் எழுதியிருக்காரு..என் நண்பர் கூட சொல்லியிருக்காரு, நிறைய பெண்கள் அப்படி இருக்கிறார்கள் என்று. உங்களை ஆள் வச்சி எல்லாம் அடிச்சி இருக்காங்களா? சொல்லவே இல்ல?.. அணிலுக்கு நெனச்சி பார்த்து சிரிக்குது இங்க...:)))))
10:50 PM
Madura said...
அணிலு,முஹாஹா,... என்னையாவது அடிக்கிறதாவது ... நான் வீர பாண்டிய கட்டபொம்மன் ஊராக்கும்!!! ... பேசியே கொன்னுருவேன்! :) ... என் கிட்ட அறுவை வாங்கிறதுக்கு கிணத்தில விழுந்திரலாம்னு நிறைய பேர் நிலமை! ;)

3 பின்னூட்டங்கள்:

At Monday, 26 February, 2007, சொல்வது...

இந்தப் பதிவைத் தள்ளிக்கொண்டு "ஆணுக்கும் உண்டு செக்சுசல் ஹாராஸ்மெண்ட்ஸ்" வந்து நிக்குது. சரி மீள் பதிவா தானே
வந்துடுச்சு என்று நினைத்து, எடிட் செய்துவிடலாம் என்றுப் போனால் அங்கு காணலை, என்னமோ குழப்புது. கிளிக்கிப் பார்த்தால் பழைய தேதியிலேயே, மறுபிறவி எடுத்திருக்கு.

 
At Monday, 26 February, 2007, சொல்வது...

நல்ல ஐடியா.. சந்தோஷ் கூட இப்படி செய்தார் ஆனால் பதிவுக்கு லின்க் மட்டும் கொடுத்து இருந்தார் நீங்கள் பதிவையே போட்டு விட்டீர்கள். ::)))))))) என் பதிவுக்கு நிறைய பேர் வருவதில்லை.. இங்கு நிறைய டிராபிக் ஜாம் இருக்கும் இல்லையா?... :))

 
At Wednesday, 28 February, 2007, சொல்வது...

கவிதா, மாடரேஷனில் உங்க கமெண்டுகள் மாட்டியிருந்தன.
ஹூம்! வந்தது உங்க பின்னுட்டம்
மட்டுமே, இதுல... சும்மாவா சொன்னாங்க, நெனப்பு பொழப்ப கெடுக்குதுன்னு :-)
இங்க எடுத்துப் போட்டது, நான் என்ன சொன்னேன்னு, ஒரு சேப்டிக்குதான்:-)

 

Post a Comment

<< இல்லம்